பக்கங்கள்

11 மார்ச் 2011

சிம்புவின் எவன்டி ஒன்ன பெத்தான்.

வானம் படத்துக்காக சிம்பு பாடி இருக்கும் 'எவன்டி ஒன்ன பெத்தான்' பாடல்தான் அடுத்து காதல் இளைஞர்களின் தேசிய கீதம் என்று சூடம் அடிக்கிறது அந்தப் பட யூனிட் . பாடலை எழுதியது கூட எஸ் டி ஆர் என்று பெயர் மாற்றியும் -- எல்லோராலும் சிம்பு என்ற அழைக்கப் படும் - சிம்புதான் (பின்ன, வேற என்ன சொல்றது) அந்த தைரியத்திலோ என்னவோ அந்த ஒரு பாட்டை மட்டும் வெளியிட அது எப் எம் மை உண்டு இல்லை பண்ணிக் கொண்டிருக்கிறது . பாடலை இந்தியிலும் எடுத்துள்ளனராம் (எண்ணமோ திட்டம் இருக்கு )
மற்ற பாடல்களின் வெளியீட்டு விழா மார்ச் பதினைந்து அன்று நடைபெறுகிறது (அப்ப அது எல்லாம் சுமாரான பாட்டு தானோ?.)
இதற்கிடையில் எல்லோரும் பாரட்டும்படியான ஒரு காரியத்தை செய்துள்ளார் வானம் பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி . (இது அரசியல் நியூஸ் இல்லீங்கோ )
ஏ ஆர் ரகுமானை ஆஸ்கார் தமிழனாக அடையாளம் காட்டிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் நடித்த ரூபினா அலி என்ற குழந்தை நட்சத்திரத்தின் ( சரி .... இப்ப கொஞ்சம் வளந்துருச்சி !) வீடு.......அல்ல அல்ல குடிசை, மும்பை பாந்த்ரா பகுதியில் அண்மையில் தீப்பிடித்து எரிந்தது . படத்தில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு வழங்கப்பட்ட பல விருதுகள் கூட தீக்கிரையாயின .
அந்த குழந்தைக்கு ஐம்பதாயிரம் ரூபாய பண உதவி வழங்கியிருக்கிறார் தயாநிதி . வானம் பேருக்கு பொருத்தமான விஷயம் .
எரிந்த மனசு குளிரட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக