
மற்ற பாடல்களின் வெளியீட்டு விழா மார்ச் பதினைந்து அன்று நடைபெறுகிறது (அப்ப அது எல்லாம் சுமாரான பாட்டு தானோ?.)
இதற்கிடையில் எல்லோரும் பாரட்டும்படியான ஒரு காரியத்தை செய்துள்ளார் வானம் பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி . (இது அரசியல் நியூஸ் இல்லீங்கோ )
ஏ ஆர் ரகுமானை ஆஸ்கார் தமிழனாக அடையாளம் காட்டிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் நடித்த ரூபினா அலி என்ற குழந்தை நட்சத்திரத்தின் ( சரி .... இப்ப கொஞ்சம் வளந்துருச்சி !) வீடு.......அல்ல அல்ல குடிசை, மும்பை பாந்த்ரா பகுதியில் அண்மையில் தீப்பிடித்து எரிந்தது . படத்தில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு வழங்கப்பட்ட பல விருதுகள் கூட தீக்கிரையாயின .
அந்த குழந்தைக்கு ஐம்பதாயிரம் ரூபாய பண உதவி வழங்கியிருக்கிறார் தயாநிதி . வானம் பேருக்கு பொருத்தமான விஷயம் .
எரிந்த மனசு குளிரட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக