பக்கங்கள்

27 ஆகஸ்ட் 2011

பங்களா கட்டுகிறார் சமீரா.

மும்பையின் பெருமைக்குரிய கடற்கரையான ஜூஹுவில் சொந்த பங்களா கட்டுகிறார் நடிகை சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சமீரா. தெலுங்கு, இந்தியிலும் பிஸியாக உள்ளார். அவர் மும்பையின் புகழ்மிக்க ஜூஹு கடற்கரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து சமீரா அளித்துள்ள பேட்டியில், மும்பையில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறுகிறது. அங்குள்ள ஜூஹு பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். எனது தந்தையும், தம்பியும் அங்கேயே முகாமிட்டு கட்டுமான பணிகளை கவனித்து வருகின்றனர். எனது ஆசைப்படி வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள். நவம்பரில் கிரஹப்பிரவேசம் நடத்த உள்ளோம், என்று கூறியுள்ளார்.
தமிழில் தற்போது வெடி, வேட்டை படங்களில் நடித்து வரும் சமீரா, தனது இந்த நிலைக்குக் காரணம் இயக்குநர் கவுதம் மேனன் தான். வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகபடுத்தியதால்தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. கவுதம் மேனன் எப்போது அழைத்தாலும் கதை, கேரக்டர் என்ன என்று கேட்காமல் உடனடியாக நடிக்க சம்மதிப்பேன், என்றும் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக