பக்கங்கள்

03 ஆகஸ்ட் 2011

அனுயாவுக்கு முப்பது இலட்சம்!

ரூ.30 லட்சம் இருந்தா வாங்க; இல்லாட்டி என் வீட்டுப்பக்கமே வந்துடாதீங்க... என்று டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை விரட்டியடித்து வருகிறாராம் நடிகை அனுயா. "சிவா மனசுல சக்தி" மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. எப்படிப்பட்ட கவர்ச்சியான வேடத்திலும் நடிக்க தயங்காத அனுயா, அந்த படத்தை தொடர்ந்து "மதுரை சம்பவம்", "நகரம்" போன்ற படங்களில் நடித்தார். அனுயா படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள்தான் வர மறுக்கின்றன.
இந்நிலையில்தான் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் "நண்பன்" படத்தில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய் பட வாய்ப்பு என்றதும் ஓ.கே., சொன்ன அனுயா படத்தில் விஜய்க்கு அக்கா கேரக்டர் என்றதும் சம்பளத்தை ரூ.30 லட்சம் வரை உயர்த்தி விட்டாராம். அக்கா வேட விஷயத்தை வெளியே கசிய விடக்கூடாது என்று படக்குழுவினருக்கு அன்புக்கட்டளை விதித்தாலும், விஷயம் கசிந்து, பல டைரக்டர்கள் அக்கா கேரக்டர்களோடு அனுயா வீட்டு வாசலுக்கு வரத்தொடங்கி விட்டனர். அவர்களையெல்லாம் நோ சொல்லி திருப்பி அனுப்பி விட்டதோடு, ரூ.30 லட்சம் சம்பளம் என்றால் வாருங்கள்; இல்லாட்டி வேறு ஆளை பாருங்கள் என்று கூறி வருகிறாராம்.
அக்கா வேடம் பற்றி அனுயா அளித்துள்ள் பேட்டியில், விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் ஹீரோயின் வேடங்கள்தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு?, என்று கேள்வி எழுப்பியுள்ளார். அது சரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக