பக்கங்கள்

19 ஆகஸ்ட் 2011

சின்னப்பொண்ணு தமன்னா!

நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார்.
நேற்று வேலூரில் நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார் நடிகை தமன்னா. தமன்னா வருவதை அறிந்த ரசிகர்கள் கடைக்கு முன் குவிந்துவிட்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு வெளியே வந்த தமன்னாவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.
கூட்டம் அதிகமாகவதை உணர்ந்த கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் தமன்னாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது லேசான தடியடியும் நடத்தப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமன்னா கூறுகையில்,
நான் வேலூருக்கு வந்துள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்கள் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.
தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் இன்னும் சின்ன பெண் தான். அதனால் 3 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார்.
மெதுவா யோசிங்க, ஒன்னும் அவசரம் இல்லை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக