பக்கங்கள்

20 ஏப்ரல் 2011

போராளியில் திரிஷா.

இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து “போராளி” என்ற படம் தயாராகிறது. இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இவர் சுப்பிரமணியபுரம் ஹிட் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நாடோடிகள் படத்தில் நாயகனாக நடித்தார். போராளி படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார்.
ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறை, விடுதலைப் புலிகள் போராட்டம் போன்றவை இப்படத்தில் காட்சிபடுத்தப்படுகின்றன. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்துக்கு நாயகி தேர்வு நடக்கிறது. முதலில் அஞ்சலியை முடிவு செய்தனர். ஆனால் நாயகி கேரக்டருக்கு திரிஷா பொருத்தமாக இருப்பார் என சமுத்திரக்கனி விருப்பப்படுவதாக கூறப்படுகிறது.
அதையடுத்து அஞ்சலியை நீக்கி விட்டு திரிஷாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது போராளி படத்தில் நடிக்க சசிகுமாரோ, சமுத்திரக்கனியோ இதுவரை என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை என்றார்.
திரிஷா தற்போது இரு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக