பக்கங்கள்

17 ஏப்ரல் 2011

கோடிக்கும் மயங்கமாட்டேன்!

4கோடி ரூபாய் கொடுத்தாலும் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் ஆட மாட்டேன் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். சமீபத்தில் அம்மணியை விருந்து நிகழ்ச்சியொன்றில் ஆட ரூ.4 கோடி பேசி அழைத்துள்ளனர். ஆனால் தீபிகா முடியவே முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டாராம். இதுபற்றி அவர் கூறுகையில், நடிகைகள் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்ககூடாது. லண்டனில் கோடீஸ்வரர் ஒருவர் வீட்டில் விருந்து நிகழ்ச்சியொன்றில் என்னை ஆட அழைத்தனர். அதற்கு ரூ.4 கோடி தருவதாக கூறினார்கள். தம்மரே தம் என்ற ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினால் போதும் என்றனர். நான் தமாஷ் செய்கிறார்கள் என்று நினைத்தேன். அதன்பிறகு கடிதம் அனுப்பியும் வற்புறுத்தினார்கள். ஒரு பாட்டுக்கு ஆட ரூ.4 கோடி தருவார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு நான் அந்த அழைப்பை நிராகரித்து விட்டேன். சினிமாதான் எனக்கு முக்கியம். அதில்தான் ஆடுவேன். பணத்துக்காக வீட்டு விருந்துக்கெல்லாம் ஆடமாட்டேன் என்று மறுத்து விட்டேன், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக