பக்கங்கள்

17 மே 2011

கதை நல்லா இருக்கணும்.

பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியாமணி, "பருத்திவீரன்" படத்தில் முத்தழகு கேரக்டர் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். அதன்பின்னர் நிறைய படங்களில் நடித்த ப்ரியாமணி பரத்துடன் "ஆறுமுகம்" படத்திற்கு பிறகு காணாமல் போனார். தற்‌போது தெலுங்கு பக்கம் முகாமிட்டு இருக்கும் ப்ரியாமணி ‌"ஷேத்திரம்" என்ற படத்தில் ஜெகபதிபாபு, ஷாம் ஆகியோர் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் ஏன்..? உங்களை பார்க்கமுடியவில்லை என்று கேட்டபோது கொட்டி தீர்த்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வழக்கம்‌ போல ஒரு சினிமா என்றால், டூயட், ஆடி பாடி, அழுது நடிப்பதில் ஆர்வம் இல்ல, கதை நல்லா இருக்கனும், ஒரு பீல் வரனும் படத்தை பார்த்து மக்கள் ரசிக்கனும், இப்ப சமீபத்தில் வெளிவந்த யதார்த்தமான சில படங்கள் எல்லாம் நன்றாக ‌வந்துள்ளன. படம் ரொம்ப நல்லா இருக்கு, மக்களிடத்தில் நல்லா ரீச் ஆகிருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எனக்கும் அந்தமாதிரி படங்கள் எல்லாம் வந்தால் நான் ஏன்...? நோ சொல்லப் போறேன். தமிழ் சினிமாவில் இருக்கும் நல்ல நல்ல டைரக்டர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறிப்பாக டைரக்டர் தரணி, முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக