
செங்காத்து பூமியிலே சூட்டிங்கின்போது டைரக்டர் ரத்னகுமாரிடம் உதவியாளராக பணியாற்றியவரிடம் மனதை பறிகொடுத்திருக்கிறார் பிரியங்கா. கள்ளப்பார்வை, கவனச்சிதறல் என நீடித்த இந்த காதல் ரத்னகுமாரின் காதுகளை எட்டும்போது, காதல் சூடு உச்சத்தை தொட்டிருந்தது. பாதி படத்தை படமாக்கிய பிறகு நடிகையை தூக்க முடியாது என்பதால், உதவியாளரை தூரத்தி விட்டார் ரத்னகுமார்.
படத்தில் இருந்து உதவியாளர் வெளியேறினாலும், பிரியங்காவின் மனதில் இன்னமும் குடிகொண்டிருக்கிறார் என்பதை சமீபத்திய பிரியங்காவின் நடவடிக்கைகளே காட்டிக் கொடுத்து விடுகின்றன. காதலனை விரட்டி விட்ட டைரக்டரின் கண்ணில் விரலை விட்டு ஆட்ட முடியாவிட்டாலும் காதலனுடன் சேர்ந்து தண்ணி காட்ட ஆரம்பித்திருக்கிறாராம் பிரியங்கா. அடக்கொடுமையே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக