பக்கங்கள்

28 ஜூன் 2010

குளிக்கும் போது சேலை உடுத்திக்கொண்டா குளிப்பார்கள்?-ப்ரியா மணி.



கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ப்ரியாமணி. இதையடுத்து அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் நடித்த பருத்தி வீரன் படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ஆனாலும் கடந்த ஒரு வருடமாக தமிழில் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. ராவணன் படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டு போனார். இப்போது தமிழ் சினிமாவில் அவருக்குப் படங்களே இல்லை. இதுகுறித்து ப்ரியாமணி கூறியது: பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை. தமிழ்ப் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரியவில்லை. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ராவணன் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மலையாளத்தில் வெளியான திரக்கதா படத்தில் எனக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன். ஏதோ நான் மட்டும்தான் கவர்ச்சியாக நடிப்பது போல பேசுகிறார்கள். எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாகத்தானே நடிக்கிறார்கள்... நான் ஒருத்தி மட்டும்தானா பிகினி உடையில் நடித்திருக்கிறேன்? தெலுங்கில் துரோணா படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்தமாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்...? என்கிறார்.

24 ஜூன் 2010

அப்பாவை பின்பற்றி நடிக்கும் நோக்கம் இல்லை.-சுருதி ஹாசன்.


"உலக நாயகன்' என்று அழைக்கப்படும் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதி ஹாசன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் "7ஆம் அறிவு' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் முதன் முதலாக ஹந்தியில் நடித்து அறிமுகமான "லக்' என்ற படத்தில் இவரது நடிப்பு பரவலாகப் பேசப்பட்டாலும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்போது, "7ஆம் அறிவு' படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேரப் போகும் ஸ்ருதி ஹாசனை அப்படத்தின் அறிமுக விழாவில் சந்தித்தபோது அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
தமிழ் படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறீர்கள். அது குறித்து?
ஏ.ஆர்.முருகதாஸ் ஸார் இயக்கும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் முருகதாஸ் ஸார் வித்தியாசமான இயக்குநர். அவரோட ஒவ்வொரு படங்களும் பேசப்பட்டிருக்கிறது. என் கேரியரில் இந்த மாதிரி ஒரு இயக்குநரோட, சூர்யா மாதிரியான ஒரு ஹீரோ கூட முதல் படம் பண்றது சந்தோஷமாக இருக்கிறது.
இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது இப்போதே என் மனசுக்கு தோன்றுகிறது. இந்தப் படத்தில் எனது திறமையை நிரூபிக்கும் வகையிலான பாத்திரம் அமைந்திருக்கிறது. அந்த வேடத்தை சிறப்பிக்க நிறைய உழைப்பேன்.
சூர்யா மற்றும் இயக்குநர் முருகதாஸ் குறித்து?
சூர்யா படத்துக்குப் படம் மாறுபட்ட நடிப்பை, ஸ்டைலை வெளிப்படுத்தி நடித்து வரும் சிறந்த நடிகர். என்னுடைய முதல் தமிழ்ப் படம் அவருடன் அமைந்ததில் ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன். வெறும் பாட்டு, கிளாமர் என்றில்லாமல் அற்புதமான கதையை வைத்து படம் இயக்குபவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவருடைய இயக்கத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து உங்கள் அப்பா என்ன சொன்னார்?
அப்பாவிடம் ஆலோசனை மட்டும் கேட்டேன். மற்றபடி இந்தப் படத்தின் கதையை கேட்டது, அதில் நடிக்க முடிவெடுத்தது எல்லாம் என்னோட சாய்ஸ்தான்.

உங்கள் நடிப்பில் அப்பாவோட சாயல் இருக்குமா?
அப்பாவோட ஸ்டைல் எனக்கு வேண்டாம். அவர், அவருக்குன்னு ஒரு ஸ்டைலை வைத்திருக்கிறார். அதை ஃபாலோ பண்ண நான் விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை இன்ஸ்பிரேஷன்னு சொன்னால் அது என்னோட வாழ்க்கையும், எமோஷன்ஸýம்தான். சுருக்கமாக சொல்வதென்றால் நான்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.
"7ஆம் அறிவு' படத்தின் கதைக்களம் என்ன?
என்ன மாதிரி கதைக்களம் என்பதை சொல்ல முடியாது. அது சீக்ரெட். ஆனால் இந்தப் படம் வித்தியாசமான, இன்ட்ரஸ்டிங்கான ஒரு படமாக இருக்கும். இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்டை படிக்கும்போதே அதில் ரொம்பவும் இம்பரஸ் ஆகி விட்டேன். இந்தப் படம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
பாலிவுட், ஹாலிவுட்டிலிருந்து வாயப்புகள் வந்தால் நடிப்பீர்களா?
என்னை பொறுத்தவரை நல்ல கதைக்கும், கேரக்டருக்கும்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன். அது எந்த மொழியாக இருந்தாலும் பிரச்சினையில்லை. முதலில் என்னோட திறமையை வெளிப்படுத்தணும். அதற்கேற்ற மாதிரி படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.
வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தினம் தினம் புது புது விஷயங்களை கற்றுக்கொண்டு, அடுத்தடுத்த இடத்துக்கு முன்னேறிக் கொண்டே இருக்கணும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கணும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை கண்டு கலங்காமல் எதிர்த்து நின்று போராடணும், ஜெயிக்கணும். நான் எப்பவுமே மற்றவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கணும்னு நினைப்பவள்.

13 ஜூன் 2010

வந்தான் வென்றான் படத்திற்கு நயன்தாரா கதாநாயகி?


ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற படங்களை இயக்கிய கண்ணன் தற்போது ஜீவா வைத்து ‘வந்தான் வென்றான்’ படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். மும்பையில் நடக்கும் க்ரைம் திர்ல்லரை மையமாக எடுக்கப்படும் இந்த படத்திற்கு ஹீரோயின் தேடி வருகிறார் கண்ணன். கோலிவுட்டில் இப்ப இருக்கும் டாப் நடிகை முதல் புதுமுகம் வரை ஹீரோயின் தேடி வருகிறார் கண்ணன்.
தன்னுடைய முந்தைய படங்களில் மெல்லிய காதலை சொல்லிய கண்ணன் தற்போது க்ரைம் படத்தை இயக்குகிறார். இதனிடையே நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார் கண்ணன். ஏற்கனவே ஜீவா, நயன் நடித்த ‘ஈ’ திரைப்படம் வெற்றி பெற்றது தொடர்ந்து. தற்போது சென்டிமேட்டாக ஜீவா-நயன் கூட்டணியே விரும்புகிறார் கண்ணன்.

08 ஜூன் 2010

மகனே மருமகனே,திரைப்படம்.

விவேக் நடித்த நகைச்சுவை திரைப்படம்

மகனே மருமகனே.

06 ஜூன் 2010

02 ஜூன் 2010

தீராத விளையாட்டுப்பிள்ளை.

தீராத விளையாட்டு பிள்ளை,படத்தில் இடம்பெற்ற பாடல்,

உங்கள் ரசனைக்கேற்ற பாடல்களை ரசிக்க அன்பு நண்பன் .கொம்.

30 மே 2010

29 மே 2010

தமிழ் படம் படப்பாடல்.

புதிய படப்பாடல்களை பார்த்து,கேட்டு மகிழ அன்பு நண்பனுடன்

இணைந்திருங்கள்.

தீராத விளையாட்டு பிள்ளை படப்பாடல்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

28 மே 2010

பையா படத்தில் இடம் பெற்ற பாடல்.

இப்பாடலை சுதா விரும்பிக் கேட்டுள்ளார்.அவரின் விருப்பத்தை நிவர்த்தி செய்கிறது அன்பு நண்பன்.கொம்

27 மே 2010

ஆதிபகவன் மூலம் மீண்டும் வருகிறார் மம்தா!


சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களுக்குப் பின் காணாமல் போயிருந்த மம்தா ஆதிபகவன் படம் மூலம் மீண்டும் வருகிறார்.அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, பாங்காக் நாடுகளில் சத்தமில்லாமல் ஒரு ஷெட்டியூல் முடிந்திருக்கிறது. கதாநாயகி கிடைக்காமல் தவித்த அமீர், கடைசி நேரத்தில் கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சமீபகாலமாக கோலோச்சிவரும் மம்தா மோகந்தாஸைத் தேடிப்பிடித்து நாயகியாக்கியிருக்கிறார். இவரை பாங்காக் கூட்டிப்போய் ஒரு ஷெட்டியூலை முடித்துத் திரும்பியிருக்கிறார். பருத்தி வீரனில் நடித்த ப்ரியாமணியே மீண்டும் அமீர் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு இப்போது மம்தாவுக்குப் போய்விட்டது.

25 மே 2010

படிக்காதவன் படப் பாடல்.


தமன்னாவின் அழகு இப்பாடலை மீண்டும் மீண்டும்

பார்க்க தூண்டுகிறது,நடனமும் மிகவும் நன்றாக இருக்கிறது,

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.உங்களுக்கும் பிடித்திருக்கும் என

நினைக்கிறேன்.உங்கள் விருப்பப் பாடல்களையும் எழுதி அனுப்புங்கள்,நாங்கள்

உங்கள் விருப்பத்தை நிவர்த்தி செய்வோம்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல்:ravies152415@yahoo.de

சுறா படப்பாடல்,தஞ்சா ஊரு ஜில்லாக்காரி.

சுறா படத்தில் இடம்பெற்ற இப்பாடலை சுபோ அவர்கள் தனது விருப்பமாக

தெரிவு செய்துள்ளார்,தனக்கு பிடித்த நடிகர்களுள் விஜயும் ஒருவர் எனக்குறிப்பிட்டுள்ள அவர்,விஜய்க்காகவே இப்பாடலை தேர்வு செய்ததாகவும்

குறிப்பிட்டுள்ளார்.

நீங்களும் விரும்பிய பாடலை மின்னஞ்சல் மூலமாக எழுதி அனுப்புங்கள்.

ravies152415@yahoo.de

வியர்வை நாற்றம் தீர ஒரு ஆலோசனை!




குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும். வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும். இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

23 மே 2010

ஐந்து கரங்களாலும் கணக்கு எழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு!



ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது.
துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி.
அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அங்காடி தெருவின் வசூல், வில்லு கடனை அடைத்துக் கொண்டிருக்கிறதாம்.
அவ்ளோ பெரிய விஜய்யோட கடனையே நேத்து வந்த சின்னப் பையன் மகேஷ் அடைக்கிறான். என்ன ஒரு விந்தை பாருங்க என்கிறாராம் அவர். இவரு சொல்றதை பார்த்தா விஜய்யும் மகேஷ§ம் ஒண்ணு. இதை விளங்கிகிட்டா வின்னுன்னு ஒரு புதுமொழி எழுதலாம் போலிருக்கே!

22 மே 2010

பயமறியான்,திரைக் கண்ணோட்டம்.



வீட்டு வேலை செய்து பிழைக்கும் சரண்யா மகன் மகேஷ் ராஜா. குடித்து ஊதாரியாக சுற்றுகிறார். ஆனாலும் மகன்மேல் பாசம். அவரை திருத்த எவ்வளவோ முயன்றும் தோல்வி அடைகிறார்.

ரவுடிகளுக்கு உதவி கோடியாய் சம்பாதிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிஷோர் எதிரிகளை தீர்த்துகட்ட மகேஷ் ராஜாவை பயன்படுத்துகிறார். தாதா பொன்னம்பலத்தை வீழ்த்தி அவரிடம் இருந்த பல லட்சங்களை கொள்ளையடித்து வரவைக்கிறார். கடையில் இருந்து காலி செய்ய மறுக்கும் ஒருவனை மிரட்டி வெளியேற்ற ஏவுகிறார். அப்போது கடைக்காரரின் அடியாட்களுக்கும் மகேஷ்ராஜா கோஷ்டிக்கும் அடிதடி நடக்கிறது. இந்த மோதலில் ரமேஷ்ராஜா வீசும் பாட்டில் உடைந்து கண்ணாடி பறந்து போய் அவ்வழியாக வரும் சரண்யா கழுத்தை சீவுகிறது. அதே இடத்தில் பலியாகிறார். தாய் இறந்த அதிர்ச்சியில் இருக்கும் மகேஷ்ராஜாவை என் கவுண்டரில் தீர்த்துகட்ட கிஷோர் போலீஸ் படையுடன் புறப்படுகிறார். அவர் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்.

ஆக்ஷன், காதல், தாய்ப்பாசத்தின் மீது கதையை நகர்த்துகிறார் இயக்குனர் பிரதீஷ்... மூன்றிலும் தாய் மகனுக்கான பாசபோராட்டமே முதல் இடம் பிடிக்கிறது. மகன் கெட்டவனாக இருந்தும் அவன் மேல் காட்டும் தாயின் அன்பும் அவளது மகத்துவத்தை சாவுக்கு பின் உணரும் மகனின் பாசமும் போட்டி போட்டு மனதை பிழிகின்றன.

மகேஷ்ராஜா ஆக்ஷன் கேரக்டரில் பொருத்தமாக பதிகிறார். பார்வை, முறைப்பு, நடை, பேச்சு எல்லாவற்றிலும் அதிரடி. உதயதாரா காதலியாக வந்து போகிறார். அவருக்கும் மகேஷ்ராஜாவுக்கும் இடையிலான காதலில் ஜீவன் இல்லை. கிளைமாக்சில் துப்பாக்கியுடன் விரட்டும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி உதய தாராவிடம் என்னை மறந்து வேறு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள் என்று கண்ணீருடன் விடைபெறும் போது நெஞ்சு கனக்கிறது. அழுக்கு உலகம் கல்லறை, குடி என நாயகனை ஒரே களத்தில் நகர்த்துவது சலிப்பு..

ரவுடிகளை மோத விட்டு பணம் பறிக்கும் வித்தியாசமான போலீஸ் வில்லனாக கிஷோர் மிரட்டுகிறார். சரண்யா தாய் பாசத்தின் சின்னமாக நிற்கிறார். முடிவு பரிதாபம். மணிகண்டனும் ஆக்ஷன் வேஷம் கட்டியுள்ளார். கிஷோர் மனைவியை பலவந்தம் செய்வதும் அதனால் சித்ரவதை செய்து கொல்லப்படுவதும் பரபர... பொன்னம்பலம், தேவிகிருபா, அஸ்வதி, காதல் சுகுமார், கொட்டாச்சி ஆகியோரும் உள்ளனர்.

பி.சி. சிவன் இசையும் ஆர்.சரவணன் ஒளிப்பதிவும் கை கொடுக்கிறது.

21 மே 2010

ஐஸ்வர்யா ராய் எப்போ குட்டிபோடுவது?பார்த்தீபனின் நக்கல் பேச்சு!


ஷங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து பேசுவதாகக் கூறிக் கொண்டு தத்துப் பித்தென்று உளறி வைத்தனர் மூத்த இயக்குநர்கள் முதல் நேற்றைய இயக்குநர்கள் வரை. ஐஸ்வர்யாவுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தது சந்தோஷமாக இருந்தது. அவரது அழகை ஆராதித்தேன். இந்த கிழவனுக்கு என்ன ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா... ஆராதிக்கிறதோட நிறுத்திக்கணும், என்றார். அதற்கு முன் பேசிய பார்த்திபன் வரம்பு மீறினார். ஐஸ்வர்யா ராய் குட்டி போடுவது எப்போது? என்றெல்லாம் பேசி முகம் சுழிக்க வைத்தார். மேலும் அவர் பேசுகையில், "சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்ய ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழியை ரெட்டைச்சுழி என்றும் சொல்லலாம் என்று கூறிய பார்த்திபன், கொஞ்சம் விவகாரமாகவும் பேசினார். "விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள். நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்... பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 50 கே.ஜி. தாஜமஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம்..." என்று ஏடாகூடமாக பேசினார். அதற்கும் பலமாகவே கையைத் தட்டி உற்சாகம் காட்டினார்கள் ரசிப்புத் திலகங்கள். பாரதிராஜா பேசும்போது, எனக்கு சீட் கொஞ்சம் தூரமா போட்டுட்டாங்க. ஐஸ்வர்யா ராய்க்கு அற்புதமான கண்கள் இருக்கிறது. சிரிப்பில் கர்வம் இல்லை. கர்வம் இல்லாத பொண்ணு. அதுதான் அவருக்கு சொத்து, என்றார். வைரமுத்து பேசுகையில், "ஐஸ்வர்யா ராயை கண்ணியமாகப் பார்க்க வேண்டும்" என்று பேசியவர், பின்னர் பார்த்திபன் பாணிக்குப் போய்விட்டார்... "ஐஸ்வர்யா ராயின் கூந்தல் அழகா, நெற்றி அழகா, கன்னம் அழகா, இதழ் அழகா, கழுத்து அழகா (அதுக்கும் கீழே இறங்கித் தொலைப்பாரோ என்ற சங்கடம்...), இடை அழகா... என்று பார்க்கையில், அவரது கண்ணியம்தான் அழகு" என்று கூறி முடித்தார். மேடையில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் இப்படியா கட்டுப்பாடிழந்து போவார்கள்... கடவுளே கடவுளே!

பெட்டிக்குள் படுத்தது சுறா,திண்டாடுகிறது சண் குழுமம்!


வேட்டைக்காரன் வசூலில் கோட்டைவிட்டதை ஈடுகட்டத்தான் சுறாவை வாங்கியது சன் பிக்ஸர்ஸ். ஆனால் சுறாவோ முதல் வாரமே பெட்டிக்குள் போகத் தொடங்கிவிட்டது. புறநகர்ப் பகுதிகளில் பல திரையரங்குகளில் சுறா தூக்கப்பட்டுவிட்டது. கோபி போன்ற நகரங்களில் நான்கைந்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட சுறா, சரியாக 7 நாட்களில் ஒரு தியேட்டரில் மட்டுமே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே படு தோல்வியைச் சந்தித்ததை சன் பிக்சர்ஸும் மவுனமாக ஒப்புக் கொண்டு, அதை ஈடுகட்ட சிங்கம் படத்தை விநியோகஸ்தர்களுக்குத் தர முடிவு செய்துள்ளது. இன்னொரு பக்கம் விஜய்யுடன் மல்லுக்கு நிற்பதாக, மிக நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தந்துள்ளன. இந்தப் படத்தில் நடித்த விஜய்க்கு சம்பளமாக சில கோடிகள் இன்னும் தர வேண்டுமாம் சன் பிக்சர்ஸ். இந்தத் தொகையை இன்னமும் தராமல் இழுத்தடிக்கிறதாம். விஜய்யின் தந்தையே நேரடியாகப் போய் சன் பிக்ஸர்ஸ் மேலிடத்திடம் பேசியம் ஒன்றும் பலனில்லையாம். சன் பிக்ஸர்ஸ் நேரடியாகத் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் வேண்டுமானால் தந்துவிடுகிறோம், பேலன்ஸை செட்டில் செய்யுங்கள் என விஜய் தரப்பு கேட்டுள்ளனராம். சிங்கம் ரிலீஸாகி, எங்கள் பிரச்சினை தீர்ந்த பிறகு மற்றதைப் பேசலாம் என சன் தரப்பில் கூறியுள்ளார்களாம். இந்த நிலையில், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நஷ்டத்துக்காக ஹீரோக்களின் சம்பளத்தைப் பிடிக்கக் கூடாது என்ற பிரச்சினையை நடிகர் சங்கம் மூலம் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாம் விஜய்யின் தந்தை தரப்பு...! அடடா.. தனக்கு வந்தாதான் தலைவலியும் திருகுவலியும் தெரியுது. இதுவே குசேலன் பிரச்சினையின்போது எவ்வளவு குதூகலமாக வேடிக்கைப் பார்த்தார்கள் மற்ற தமிழ் நடிகர்கள்!