உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள். அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை. அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை. இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர். அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது. அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 'நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்', என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார். மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.
29 டிசம்பர் 2012
26 டிசம்பர் 2012
மறுக்காத ரியா சென்!
![]() |
ரியா சென் |
23 டிசம்பர் 2012
லக்ஷ்மி ராயின் மேலாடை கிழிந்தது!
புதுச்சேரியில் ஒன்பதுல குரு படப்பிடிப்பில் இருந்த நடிகை லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்ததில் அவரது மேலாடை கிழிந்தது. பி.டி. செல்வகுமார் இயக்கத்தில் வினய், லஷ்மி ராய் நடித்து வரும் படம் ஒன்பதுல குரு. இந்த படத்தில் ஒரு டூயட் பாடலை புதுச்சேரியில் படமாக்கினர். ஷூடிட்ங் இடைவேளையில் லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது கூட்டம் கூடியதுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் லக்ஷமி ராயிடம் சில்மிஷம் செய்தனர். இதில் அவரது மேலாடை கிழிந்தது. நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த படக்குழுவினர் ஓடிவந்து லக்ஷ்மி ராயை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு லக்ஷ்மி ராய் அவரது ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படப்பிடிப்பில் நடிகைகளிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்வது இது முதல் முறையன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதுல குரு படத்தில் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஞ்சலி, ச்தயன், மந்த்ரா மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
15 டிசம்பர் 2012
அசின் மீது பைத்தியமாக உள்ள ரசிகர்!
தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை அசினுக்கு ஒரு தீவிர ரசிகர் உள்ளார். அந்த நபர் அசின் மீது பைத்தியமாகவே உள்ளார். மேலும் அசினையே மணக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காதல் பைத்தியம் முற்றவே அந்த நபர் பெங்களூரில் அசினுக்காக ஒரு பங்களாவை வாங்கிப் போட்டுள்ளார். மேலும் அசின் எப்பொழுது பெங்களூர் வந்தாலும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இந்த தீவிர ரசிகர் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். தனது பிரிய நடிகைக்கு அந்த நபர் பூக்கள், சாக்லேட் மற்றும் பேஷன் ஐட்டங்களை அனுப்பி வைத்துள்ளார். அவர் அசின் மேல் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் அசினோ பாலிவுட் மீதல்லவா பைத்தியமாக இருக்கிறார். எப்படியாவது அங்கு பெரிய ஆளாகிவிட வேண்டும் என்று போராடி வரும் அவர் இந்த ரசிகரின் அன்புக்கு அடங்குவாரா என்ன? இதற்கு முன்பு பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாதியாத்வாலாவின் மகன் சுபான் அசினுக்கு லாலிபப், சாக்லேட், கரடி பொம்மை மற்றும் ரோஜாப் பூக்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 டிசம்பர் 2012
இயக்குநர் கர்ணன் மரணம்!

09 டிசம்பர் 2012
உன் சமையல் அறையில்!
நடிகை சினேகா பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உன் சமையல் அறையில் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர், இயக்குனர் பிரகாஷ் ராஜ் மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
பிரகாஷ் ராஜ் இதற்கு முன்பு கன்னடத்தில் அபியும், நானும் மற்றும் தோணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா பிரகாஷ் ராஜ் நிச்சயம் நல்ல படங்களை இயக்குவார் என்ற நம்பிக்கையில் அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு இந்த படத்தில் கிடைத்துள்ள கதாபாத்திரத்தை நினைத்து சினேகா குஷியாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பு சமையல் தெரியாத நான் தற்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். கடவுள் அருளால் எனது திருமண வாழ்க்கை அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றார் சினேகா.
03 டிசம்பர் 2012
சிம்புவுடன் அப்படி எதுவுமில்லை"லேகா மறுப்பு!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)