பக்கங்கள்

17 ஜூன் 2011

தமிழில் வாய்ப்புத்தாங்கப்பா!

தேசிய விருது வாங்கியதும், 'இப்படிப்பட்ட ரோல் வேண்டும், அப்படி நடிக்கமாட்டேன்' என்றெல்லாம் பிகு பண்ணிய ப்ரியாமணிக்கு தமிழில் இப்போது படங்களே இல்லை.
கடைசியாக நடித்த ராவணன், ரத்த சரித்திரம் படங்களில் அவர் நடித்திருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு 'தம்மாத்துண்டு' வேடங்கள்!
தெலுங்கு, கன்னடம் என்று போய்க் கொண்டிருக்கிறார். இன்டஸ்ட்ரியில் பெயர் ரிப்பேராகிவிட்டதால், நல்ல வாய்ப்புகள் வருவதும் நின்றுபோய், உப்புமா கம்பெனிகள்தான் அவரை அணுகுகின்றனவாம்.
சமீபத்தில் தனது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாடிய பிரியாமணி, இப்போது நம்பிக்கொண்டிருப்பது 'ஷேத்திரம்' என்ற தெலுங்கு படத்தை. இது புராணப் படம்.
என்ன இப்படியாகிடுச்சே நிலைமை என்று துக்கம் விசாரித்த நிருபர்களிடம், "தமிழ்ல வாய்ப்பு அவ்ளோதானா என்று எல்லோரும் கேட்கிறார்கள். மீண்டும் தமிழில் நடிக்கணும். எந்த மாதிரி வேடமானாலும் ஓகே. நல்லமாதிரியா எழுதி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க," என்கிறாராம்.எல்லாம் காலம்தான் பிரியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக