பக்கங்கள்

16 நவம்பர் 2011

அவர் மெளன குருதான் என்கிறார் இனியா!

வம்சம், உதயன் ஆகிய படங்களுக்குப் பிறகு அருள்நிதி நடிக்கும் புதிய படம் மவுன குரு.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக இனியா அறிமுகமாகிறார். படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் அருள் நிதி, இனியா உள்ளிட்ட குழுவினர்.
அருள்நிதி கூறுகையில், "ஒரு கோபக்கார ஆனால் அமைதியான இளைஞராக வருகிறேன். இந்தப் படத்தின் கதையை கேட்டபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எனக்கு மிகத் திருப்தியாக இருக்கிறது. படத்திலேயே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆக்ஷன் காட்சிகள் அல்ல, இனியாவுடனான காதல் காட்சிகள்தான்", என்றார்.
ஏன் அப்படி... ? என்று கேட்டபோது, "பொதுவாகவே பொண்ணுங்க கூட பேசவே எனக்கு ரொம்ப கூச்சம். அப்படிப்பட்ட என்னைப் போய் ஹீரோயினுக்கு கிஸ்ஸெல்லாம் அடிக்கச் சொன்னா... கஷ்டமாத்தானே இருக்கும். ஆனாலும் சமாளிச்சிக்கிட்டேன்," என்றார்.
மவுனகுருவில் நடித்த அனுபவம் குறித்து இனியா கூறுகையில், "ஹீரோ அருள்நிதி அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பார். படத்தின் தலைப்புக்கேத்தமாதிரி மவுனகுருதான் அவர்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக