பக்கங்கள்

05 நவம்பர் 2011

சகீலாவை காண தள்ளு முள்ளு!

ஆபாச பட வழக்கில் நடிகை ஷகிலா நெல்லை கோர்ட்டில் ஆஜாரானார். அவரைப் பார்க்க ஏராளமான 'ரசிகர்கள்' திரண்டுவிட்டனர்.
இவ்வழக்கின் விசாரணை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பாளையங்கோட்டையிலுள்ள ஒரு திரையரங்கில் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி இரவு காட்சியில் ஆபாச படம் திரையிடப்பட்டது. இது தொடர்பாக திரையரங்கு குத்தகைதாரரான மதுரையை சேர்ந்த வசீகரன், மேலாளர் பாஸ்கரன், பேட்டையை சேர்ந்த ஆபரேட்டர் பரமசிவன் பட விநியோகஸ்தர்கள் சுப்பிரமணி, நெல்லை டவுன் சிவசுப்பிரமணி, ஊழியர்கள் பாளை முருகன், மாரிமுத்து, தாமஸ் படத்தில் ஆபாசமாக நடித்த ஷகிலா, நடிகர் தினேஷ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கு நெல்லை முதலாவது கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. இதில் நடிகை ஷகிலா, பட வினியோகஸ்தர் சிவசுப்பிரமணியன், தியேட்டர் ஊழியர்கள் முருகன், மாரிமுத்து, தாமஸ் ஆகிய 5 பேர் நேற்று முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். விசாரணையை நீதிபதி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
விசாரணைக்கு நடிகை ஷகிலா நேரில் வந்ததால், அவரைக் காண ஏக கூட்டம் கூடிவிட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக