பக்கங்கள்

02 நவம்பர் 2011

மனோரமாவின் உடல் நிலையில் முன்னேற்றம்.

தலையில் இருந்த ரத்தக் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகை மனோரமாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
குளியலறையில் வழுக்கி விழுந்த மனோரமாவுக்கு தலையில் அடிபட்டதில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதையடு்தது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தக் கசிவை அகற்றும் அறுவை சிகிச்சை நேற்று நடந்தது. வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு மனோரமாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. டியூப் மூலம் தான் உணவும் செல்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக