பக்கங்கள்

23 டிசம்பர் 2011

அமைதி வேண்டுகிறார் சிம்பு.

உலக அமைதிக்காக பாடல் ஒன்றை தமிழ் திரையுலக நாயகன் சிம்பு எழுதியுள்ளார். +தமிழ் திரையுலகில் நடிப்பு, நடனம், பாடல், இயக்கம் என பல தளங்களில் வலம் வரும் சிம்பு, உலக அமைதிக்காக ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இது அன்புக்கான பாடலாக, உலகத்தின் Love Anthem- ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தனது ஃபேஸ்புக் இணையத்தில் அவர், சிலர் 2012-ல் உலகம் அழிந்துவிடும் என நம்புகிறார்கள். வாய்ப்புள்ளது. அன்புக்கு பஞ்சம் பெருகுவதால், உலகம் முடிவுக்கு வந்துவிடலாம்.
நாம் அன்பை பரிமாறிக்கொள்வதில் மொழி தடையாக இருக்கிறது. 96 மொழிகளையும் பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு..
சீக்கிரம் வருகிறது.. உலகத்துக்கான Love Anthem ! என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக