சில்க் ஸ்மிதா கதையை தழுவி உருவாகியுள்ள நடிகையின் டைரி படம் விரைவில் திரைக்கு வருகிறது.இதில் சில்க் வேடத்தில் சனா கான் நடித்துள்ளார். மலையாளத்தில் சில்க் கதையை கிளைமாக்ஸ் என்ற பெயரில் அனில் இயக்குகிறார்.இதில் சனா கான் நடிக்கிறார்.அதே படம் தமிழில் Ôநடிகையின் டைரிÕ பெயரில் ரிலீசாக உள்ளது. டிஜிட்டல் என்டர்டெய்னர் ஹெச்.ஏ.கே. தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்களை எழுதி, நிர்வாக தயாரிப்பு பொறுப்பை Ôசிலந்தி¤Õஇயக்குனர் ஆதிராம் ஏற்றுள்ளார். அவர் கூறியதாவது, சில்க் கதை என்ற பெயரில் பலர் படம் எடுக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் அவரது வாழ்க்கை கதை படங்கள் அல்ல. சில்க் ஸ்மிதா முதலில் மலையாளத்தில்தான் நடித்தார்.அவரை மலையாளத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி.சில்க் பற்றி அறிந்தவர்.அவரே இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.கேரளா,ஆந்திரா தவிர மற்ற இடங்களில் தமிழில் இப்படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.வெறும் கவர்ச்சியை நம்பி இப்படம் எடுக்கப்படவில்லை.கனமான திரைக்கதை இதில் இருக்கும்.
31 மார்ச் 2013
28 மார்ச் 2013
நயன்தாராவுடனான என் நட்பு உண்மைதான்!
சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான். நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது. இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம்.எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது,"என்றார்.
26 மார்ச் 2013
நடிகை சுகுமாரி மரணம்!

பொன்னான இதழ்கள் புண்ணாகலாமா?
முத்தக் காட்சியில் அஞ்சலியின் உதட்டை காயப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஆர்யா.
ஜெயம் கொண்டான் திரைப்பட இயக்குனர் கண்ணனின் அடுத்தப் படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சேட்டை'. இதில் ஆர்யா நாயகனாகவும், ஹன்சிகா, அஞ்சலி நாயகிகளாகவும் நடிக்கின்றனர். படத்தில் இரண்டு லிப் லாக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. காட்சிப்படி ஆர்யா, ஹன்சிகாவுக்கும், அஞ்சலிக்கும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்க வேண்டும். இந்நிலையில் ஹன்சிகாவுடனான லிப் லாக் காட்சியில் 6 முறை டேக் எடுத்த ஆர்யா அஞ்சலியுடனான லிப் லாக் காட்சியில் 15 முறை டேக் எடுத்திருக்கிறார்.
இதனால் சற்று கோபமடைந்த அஞ்சலி, உதடு புண்ணாகிவிட்டது என நேரடியாக இயக்குனரிடம் கூறியுள்ளார். ஒரு வழியாக இக்காட்சியை எடுத்து முடித்ததும் அடுத்த இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்கு வராமல் விடுமுறை எடுத்துக்கொண்டார் அஞ்சலி.
05 மார்ச் 2013
மூத்த நடிகை ராஜசுலோசனா மரணம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)